Friday, January 22, 2021

பெண்ணே நீ

 


 

 

பெண்ணே நீ

 

பிராம்ணன் பூணல்

போட்டுக்கொள்கிறான்

பூணல் போட்டுக்கொண்ட

எல்லோருமா பிராம்ணர்கள்

பிராம்ணப்பெண்

பூணல் அணிவதில்லை

பின் எப்படி அவள் பிராம்ணத்தி

பார்ப்பனப்பெண்

மணமகன் கைத்தலம் பற்ற

பிராம்ணத்தி ஆகிறாள்

அதுவரை அவள் யார்

பிராம்ணத்தி இல்லையோ .

கணவனை இழந்த

அத்தனைப்பெண்களும்

பட்ட இன்னல்கள்

சொல்லில் அடங்காது

உடன் கட்டை ஏற்றி

கணவன் சிதையில்

கொன்று விடுதல்

வழக்கமாய் இருந்தது

புண்ணிய பூமியில்

கைம்பெண்ணாய் இருந்தவள்

பட்ட துயரங்கள்

எழுதி  எழுதி எழுதி  மாளாது

எல்லாக் கொடுமைக்கும்

 பீடங்களின் ஆசீர்வாதமுண்டு

தலையில் முடியோடு

கைம்பெண்

பீடங்களைத் தரிசிக்க

பீடங்கள் தோஷப்பட்டுப்போகிறார்கள்

கைம்பெண் இறந்துபோனால்

அவள் பிறப்புறுப்பில்  சாணம் பூசி

சவத்தைச்

சுடுகாட்டுக்குத்தூக்கிப்போ

கணவனுக்கு முன்னே

அவள் சுமங்கலியாய்ப்போனால்

அவள்: பிறப்புறுப்பில்

மஞ்சள் பூசி

சுடுகாட்டுக்குத்தூக்கிப்போ.

இன்றைக்கும் நடைமுறை.

பெண் ஒருத்தி

 மதகுருமார் ஆகவே முடியாது

எந்த மதமானால் என்ன

அமெரிக்க த்துணை ஜனாதிபதியே

இன்றைக்குத்தான்

ஒரு பெண் கமலா ஹாரிஸ்

சின்ன சுவாரஸ்யம்

இந்தியர்களுக்கும்  அவர்

தூரத்து உறவாம்.

------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment