Saturday, January 16, 2021

எங்கே குகன்?

 

எங்கே குகன்?
.


விடுதலை சமீபிக்கிறது
'பாரதம் இரு கூறாகும் 

விஷயம்கருவுற்ற அன்றே

கொன்று போட்டனர் தேச பிதாவை.

நாதூராம் கோட்சேவா

காந்தியைக்கொன்றான்.
சதைப்பிண்டத்தை ச்சுட்டது அவனே.
.யார்தான் இல்லை என்றார்கள்.

.
ராவணனைக்கொன்ற
ராமனை நோக்க
குகனைத்தோள் சேர்த்த   

ராமன் உயரமானவன்

தேசத்தை மூன்றுமுறைசுற்றி வந்து.
ராமர் கோவில்களில்

 தேடிப்பாருங்கள்
குகனுக்கு எங்கேனும் ஒரு சின்ன அடையாளம் தானுண்டா


அனுமன் நெஞ்சுக்குள் ராமன் இருக்கலாம்..
கரியவன் நெஞ்சுக்குள்

 அன்புக் குகனே வாழ்கிறான்
ஊனக்கண்களுக்கு எப்படி ப் பிடிபடும்


தான் வரிந்து கொண்டபடி
மூத்தோனுக்காய்

 வாழ்க்கையைத்தொலைத்தான்
அந்த அயோத்தி இளவல்..
ஊர்மிளையின் சோகம்தான் ஊருக்கு த்தெரிந்ததா


ஆரியரல்லாதோரைப்பகைத்த
ஆரியர் வசம்  வீரம் மட்டும்

 மிச்சமிருந்தது.
அது வேதக்காலம்.


மனு சம்கிதை வந்து சூத்திரனை

மொத்தமாய் விழுங்கியபோது

பிராம்ணர்கள் 

அறிவுக் குருடானார்கள்.

------------------------------------------------------------------

?

No comments:

Post a Comment