Saturday, January 16, 2021

அச்சம் தவிர்.

 

அச்சம் தவிர்.                    

 

சேமமுற வேண்டுமெனில்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச்செய்வீர்

சொன்னது மறந்து

மெல்ல த்தமிழ் இனிச்சாகும்

பாரதியின் வரியாய் மேடையில் முழக்குகிறார்.

பேதையொருவனே அப்படி உரைத்ததாய்

மாகவி சொன்னதை மறைத்திட்டார் அறங்கொன்றார்..

 

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

காக்கைக் குருவி  எங்கள் சாதி பாடிய மாகவி

ஈனப்பறையர்களேனும் சீனத்தவராய்விடுவாரோ

எப்படிப்பாடலாம் எழுகிறது கேள்வி

கவியுளம் காண்கிலார் சித்தரிப்பே இது.

புதுவைக்கனகலிங்கம் கண்ணெதிரில் நிற்க

இப்படி வாராதொரு அய்யம்.

 

வேல்ஸ் இளவரசர்  பாரதவிஜயத்தை

கவி வரவேற்றதுதான் எப்படி

தொடர்கிறது வினா

சிங்கம் நாய்தரக்கொள்ளுமோ

கர்ச்சித்த மாவீரன் பாரதியை நோக்கித்தான்.

 

பிரஞ்சு ப்புதுவைக்கு த்தன் உயிர்

பெரிதென்று எடுத்தார் ஓட்டம் வருகிறது வசை..

ரெளத்திரம் பழகு ஆத்திச்சூடி படித்தும் இக்கேள்வி.

 

பாடுபடல் வேண்டா

ஊனுடலை வருத்தாதீர்

உணவியற்கை கொடுக்கும்

வினா வெடிக்கிறது புதிராய்.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செயக்

கூவியழைத்திட்ட மாகவியை

எப்படிக் காண்பாய் நீ ?.

 

முப்பெருங்கடன் தமிழர்க்கு

சாதி ஒழித்திடல் நல்ல தமிழ் வளர்த்தல்

பாரதி போற்றுதல்

சொல்லிப்போனார் புரட்சிக்கவிஞர். .

செவி நுகர்ந்த பாரதி அன்பர்கள் யாம்

வாளா விருக்கவா தக நிற்கவா?

 

No comments:

Post a Comment