Thursday, January 14, 2021

ஜெய் கிசான்

 


 

ஜெய் கிசான்             

 

விவசாயிகள் போராட்டம்

டில்லித்தலை நகரில்

உறையும் குளிரோடு கொரோனா அச்சம்

ஐம்பது நாட்கள் ஓடிப்போயீற்று

அறுபது மனித உயிர்கள் பலி

பேச்சுவார்த்தைகள் புஸ்வாணமாயின

உச்ச நீதி மன்றம்

தலையிட்டும் கதையொன்றும்

ஆகவில்லை இக்கணமும்

உச்ச நீதிமன்றம் சொல்லும் குழுவில்

விவசாயிகளுக்குப்பேச ஏது ஆள்

என்கிறார்கள் போராளிகள்

சட்டம் இயற்றும் போது

நாடாளுமன்றத்து ஆரோக்கிய

விவாதங்கள் செத்துக்

காலம் எத்தனையோ ஆனது

எண்ணிக்கை ஆணவம் தலைக்கேறி

ஆடத்தான் வைக்கிறது ஆட்சியாளர்களை

குரல் வோட்டெனும்

அந்த ஏமாற்று வித்தை தான்

இன்றைய நடைமுறை

ஜனாதிபதிகள் வாய் திறக்கமாட்டார்கள்

நடந்த சிக்கல்களை

மனசாட்சியுள்ள பிரகஸ்பதிகள் மட்டும்

புத்தகமாய் எழுதி விட்டுப்

போய்ச்சேர்வார்கள் அவ்வளவே

மக்களாட்சிக்கு இலக்கணம்

சொல்லும் பள்ளிக்குத்தான்

விலாசம் தெரியவில்லை.

--------------------------------------------------------------------------.

-----------------------------------------

 

 


No comments:

Post a Comment