Saturday, January 23, 2021

குறள் நமது ஆசான்

 

 

குறள் நமது ஆசான்

 

முகத்திலிருந்து தோன்றியவர்கள்

பிராம்ணர்கள்

தோளிருந்து தோன்றியவர்கள்

‌க்‌ஷத்ரியர்கள்

தொடையிலிருந்து தோன்றியவர்கள்

வைசியர்கள்

கால்களிருந்து தோன்றியவர்கள்

சூத்திரர்கள்

வேதம் இப்படிச்சொல்கிறது

கீதை தந்த கண்ணன்

நான்கு வர்ணத்தையும்  படைத்தேன் நான்

செய்தொழிலும்  செயல் சிறப்புமே 

ஆதாரங்கள் வர்ணப்பிறப்புக்கு

விளக்கம் சொல்கிறான்.

வேற்றுமை தெரிந்த

நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும்

அவன் கட்படுமே 

 பகரும் புறநாநூறு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

சிறப்பொவ்வா செய்தொழில்

 வேற்றுமையான் போதிக்கும்

குறளே நமது ஆசான்

கலங்கரை விளக்கம் அதுவே.

வேதமும் கீதையும்

எந்தக்கதையோ 

சொல்லிப்போகட்டும்

---------------------------------------------

 

 


No comments:

Post a Comment