Tuesday, January 26, 2021

டிராக்டர் பேரணி

 


 

டிராக்டர் பேரணி

 

விவசாயிகள் பேரணி

நமது தலை நகர் டில்லியில்

பிரதமர் மோடி கொணர்ந்ததே

வேளாண் சட்டங்கள்

வாபஸ் பெறுக மொத்தமாய்

கோரிக்கை போராட்டமாகி

மாதங்களிரண்டு

தாண்டியே போனது

குடியரசு  நாளின்று

டில்லி நகரமே விழாக்கோலம்

கொரோனா அச்சம் நீங்காததால்

அடக்கியே வாசித்தது அரசு

வெளி நாட்டு விருந்தினர்

யாருமே இல்லை

சுருங்கிபோனது பெருவிழா

ராம் நாத் கோவிந்த்

குடியரசுத்தலைவர் 

மூவர்ணக்கொடியேற்றி

அவர் பணி முடித்தார்

வேளாண் மக்களின்

டிராக்டர் பேரணி

கல்லெறிதலும் கண்ணீர் புகைக்குண்டும்

வன்முறை வன்முறை

யார் மீது தவறு தேடவே வேண்டாம்

போடும் சட்டங்கள்

ஆய்ந்தலசி  விவாதித்தே

ஜனித்திருக்கவேண்டும்

உச்ச நீதி மன்றங்கட்குண்டு

பொறுப்புக் கூடுதலாய்

லட்சக்கணக்கில்  உழவர் படை

டில்லித்தெருக்களில் கல்மாரி

போலிசாருடன்  மோதல்  மோதல்.

உழுவாரைத்தொழுது பின் செல்லத்தான்

பணித்திருக்கிறது  குறள்

அன்ன தாதாக்கள் அலறுகின்றனர்

மக்களரசோ உச்ச  மமதையில்

எல்லாவற்றிர்க்குமோர் விலையுண்டு

காலம் கொணரும் விடை..-

---------------------------------------------------------

 

 

 

 

 


No comments:

Post a Comment