Saturday, May 18, 2024

கவிதை- 17/5/2024 சொல்புதிது கவிதைவாசிப்புக்கூட்டம்

 

17/5/24 கவிதை வாசிப்பு 

கூட்டத்தில்

எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள் 



அனுபவம் 1


கலிபோர்னியா மாநிலம்

ஆர்டிசியா நகரில்

உடுப்பி ஹோட்டலும்

நல்லி சில்க்ஸ் ம்

சென்று பார்க்கலாம்

காசு கனமாக வேண்டும் 

உடுப்பி ஹோட்டலில்

சைவம் மட்டுமே மாற்றமில்லை

வண்ணப் பாட்டிலில்

சாராயம்

வயது வந்தோர்க்கு மட்டுமே 

தின்பதில் மீதமா 

டப்பா தருவார்கள்

சின்னதும்  பெரிசுமாய்

எடுத்துப் போகலாம் வீட்டிற்கு.

அஞ்சப்பர் உண்டு 

அசைவம் உண்டு

அச்சம் வேண்டாம் 

கைரேகை சோசியர் 

யுவராஜ் ரூம் போட்டு விஜயம்

கூட்டம் அதிகம்தான்

சீனா அமெரிக்கா எதிரியாம்

தோற்ற மாயை

பிரதானமாய் அவர்களே

அனைத்திலும்

இரண்டாவதாய் இந்தியர்கள் 

தமிழர்கள் காவடி எடுப்பதும்

தேர் இழுப்பதும்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும் எல்லா முண்டு 

எழுத்தாணி கொண்டெழுதிய திருக்குறளைத் தூக்கிப்பிடித்து 

தமிழ் அமைப்புகள் 

தலை நிமிர்ந்து 

உலாவருகின்றன.


அனுபவம் 2


இந்தியப் பொருட்கள் 

அமெரிக்க கடைகள்

புளி வாங்கப்போனால் 

கொட்டைகள் சகிதம் விற்பனை

உப்புக் கடலைக்கு ஆசைப்பட்டால் தொலும்பு 

முக்காலுக்கு இருக்கும் 

பலாப்பழம் விற்கிறார்கள்

ஆனை விலையில்

வாசனையே இல்லை 

கர்டு கிடையாது கடையில் யோகர்ட்தான் 

யோகர்ட் பிளெயின் 

சொல்லி வாங்கவேண்டும்

தவறவிட்டால் ஏதேனும் 

ஒரு நெடியொடு 

தயிர் போன்றது கிடைக்கும் 

பாலில் பலரகமுண்டு 

குழம்பித்தான் போகணும் 

புதிதாய்ப்போனவர்கள் 

எங்கேயும் மனிதர்கள்.


அனுபவம்   3


பூர்வீகமாய் 

இருந்த இந்தியரை 

ஒழித்தாயிற்று 

எல்லோரும் வந்தேறிகள் 

அமெரிக்காவில் 

ஐநூறு ஆண்டுகள் 

முன்னம் வந்தவர்கள் 

ஆட்சி செய்கிறார்கள் 

உலகத்தையும் சேர்த்து 

உழைத்துக்கொடுக்க 

ஆசிய இந்தியர்கள்

லட்சம் லட்சமாய் வரிசையில் நின்றுகொண்டு.

இந்தியத்திருநாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் 

ஏராளமுண்டு வரலாற்றில் 

இந்தியர்கள் வயிற்றுப்பசிக்கு வந்திறங்கி 

இருபத்து நாலு மணிநேரமும் 

உழைத்துத்தர உறுதியேற்கிறார்கள் நாளும்.


வேடம் கட்டிகள் 


தேர்தல் நேரத்தில் 

எத்தனைப்பொய்கள் 

மேடைதோறும் 

முழங்கப் படுகின்றன

யாருக்கும் வெட்கமில்லை.

ஆகிவிட்ட வயதும் 

கற்ற கல்வியும் 

பெற்ற அனுபவமும் 

சிறுத்துப்போய் நிற்க 

வோட்டுக்காய் வேடம்கட்டி 

எப்படி நடிக்கிறார்கள்

எம் தலைவர்கள்.

வாய்மையே வெல்லும் 

எழுதிவைத்துக்கொண்டு 

வாய்மையை வணிகப்பண்டமாய் 

மதிக்கிறார்கள் 

மக்கள் மதிமயங்கி 

கைதட்டி ஆர்ப்பரிக்கிறார்கள்.


No comments:

Post a Comment