Monday, May 6, 2024

கவிதை- நாம் யார்

 இணைய கால கவியரங்கம் 40


18/4/24




நாம் யார்?


உலகமே ஒரு

கொலைக்களம்

ஒன்றைத் நின்று

ஒன்று வாழும்

என்ன கணக்கு இதுவோ

யாருடைய சூத்திரமோ

புல்லைத் தின்னும் ஆடு

ஆட்டைத் தின்னும் புலி

புழுவைத்தின்னும் எறும்பு

எறும்பைத்தின்னும் பல்லி

பல்லியைத்தின்னும் பூனை

பூனையைத் தின்னும்  குறவன்

மனித மாமிசம் தின்போரும் உளதாய்

படித்திருக்கிறோமே

என்றும் விடை தெரியாக்

காலக்கணக்கின்

புள்ளிகள் நாம்

விடை தெரியவரும் போது

நாமே

வினாவாகி நிற்போம்.


No comments:

Post a Comment