Monday, May 6, 2024

கவிதை- எது எப்படி ஆயினும்

 இணையக் கால கவியரங்கம் 31


9/4 


எது எப்படி ஆயினும்



தைவானில் பூகம்பம்

வானுயர்  கட்டிடங்கள் 

நெளித்துக்கொண்டும்

நொறுங்கிப்போயும்

அச்சம் தருகிறது

தொலைக்காட்சியில். காட்டினார்கள்

நேர்ந்திட்ட

அவலத்தை.

மக்கள் அல்லாடினார்கள்

மனித இனம் எத்தனைக்கு

கையறு நிலையில்

காலம் தள்ளுகிறது

கண் எதிரே காட்சியானது

எது நிகழ்ந்தால் என்ன

புடின் சண்டையை

நிறுத்தப்போகிறாரா

காசாவில் தான்

அமைதி திரும்புமா

ஆப்கனில் ஏதேனும்

உருப்படியாய்

நகரப்போகிறதா

இருநூறு ஆண்டுகள்

வரலாற்றைப் பின்னுக்குத்தள்ளிக்கொண்ட

இலங்கைத் தமிழர்களுக்கு

நல்ல பொழுதுதான் விடியுமா?


No comments:

Post a Comment