Monday, May 6, 2024

கவிதை- என்ன செய்ய ?

 இணைய கால கவியரங்கம் 34


13/4/24

 


என்ன செய்ய?


தாவரங்களின்

வண்ண வண்ண மலர்கள் 

அழகு காட்டி

மணம் வீசி

மது வழங்கி

எத்தனை கண்ணியமாய் 

தம்மினம் கூட்டுகின்றன

மிருகங்கள் மொத்தமும்

பெடையோடு எப்போது 

தேவையோ அப்போது

மட்டுமே கூடிக்களிக்கின்றன

அண்மையில் புதுச்சேரியில்

பத்து வயது பிஞ்சை 

நாசமாக்கிச் சாக்கடையில்

வீசி எறிந்த ஜன்மங்களை

எண்ணி எண்ணி 

மனிதகுலம்

வெட்கித் தலைகுனிகிறது

ஈராயிரம்  ஆண்டுகள் முன்னம்

திருக்குறள் ஈந்த மண்ணப்பா  இது.


No comments:

Post a Comment