Sunday, May 5, 2024

கவிதை- மேதினம்

 இணைய கால கவியரங்கம் 41


20/4/24

மேதினம்



மே தினம் வரப்போகிறது

எட்டு மணிநேர வேலையும்

வாரம் ஒரு நாள்

ஓய்வும் வாங்கித்தந்த

சிக்காகோ தொழிலாளியின்

போராட்டம் அர்த்தமற்றுப்

போனது

எந்த உத்திரவாதமும் இல்லா

நொண்டி அடிக்கும்

பணி.

ஓய்வூதியம் விடைபெற்றுக் கொண்ட

பெருஞ்சோகம்

வயிற்றுப் பசிக்கு மட்டுமே வேலை.

அது என்று போய்விடுமோ

பெருங்கவலையோடு

வாழ்ந்து முடிக்கிறான்

தொழிலாளி

உலகமயமாக்கல்

தொழிலாளியின்

தன்மானத்தை

விழுங்கித்தான் நிற்கிறது.


No comments:

Post a Comment