Monday, May 6, 2024

கவிதை-குழந்தையின் அழுகை

 இணைய கால கவியரங்கம் 28

1/


குழந்தையின் அழுகை


ஒரு வயது நிரம்பா

பேரக் குழந்தை

ஓயாது அழுகிறது

தாயும் முனைகிறாள்

தந்தையும் முனைகிறான்

அழுகை நின்றால் தானே

தாத்தா நானும்

பாட்டி அவளும்

எத்தனைச் சமாதானம் செய்தும்

அழுகை நின்றபாடில்லை

பால் குடித்தாயிற்று 

கிரைப் வாட்டர் ஊற்றியும் ஆனது

எப்படிச் சமாதானம் செய்வது

கூடை நிறை பொம்மைகள்

வைத்து ஆட்டம் காட்டியும்

அழுகை நின்றால் தானே

என்ன செய்வதென்று

விழித்த போது

போர்ட்டி கோவில்

பொத்தென்று குதித்தது

ஒரு பூனை

கருப்புப் வெள்ளையுமாய்

குழந்தையைப் பார்த்தது

அழுகையும் நின்றது

மொக்கை வாயில்

வந்தது புன்னகை.


No comments:

Post a Comment