Sunday, May 5, 2024

கவிதை -நடப்பு

 இணைய கால கவியரங்கம் 50

29/4/24


எஸ்ஸார்சி 


நடப்பு 


யாரும் எதுவும்

உருப்படியாய் 

புத்தகம் எடுத்துப்

படிப்பது இல்லை

நல்லவை சொல்லக்

கேட்பது மில்லை

எல்லோரும்

கையில் ஒரு மொபைலோடு

எதனையோ  எந்நேரமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு.

நக்கல் ரகளை

விரசம் வன்மம்

வக்கிரம் சவடால்

அழுகை அவலம்

மாறி மாறி பீத்தல்களின்

அணிவரிசை

கற்றுக்கொள்ள

காட்சி பார்ப்பதில்லை

அதிசயமாய் காட்சி

ஆனாலும்

பார்க்க யாரும்

தயாரில்லை

மண்டை முழுவதும்

ஓசைமிகு சீரியல் வம்புகளே

மனித உறவுகள் முடமாகி

விசும்புகின்றன.


No comments:

Post a Comment