Sunday, May 5, 2024

கவிதை- ரகசியம்

 


இணைய கால கவியரங்கம் 49

 


ரகசியம்


என்ன சொல்கிறோம் நாம்

என்பதே தெரியாமல்

இறைவன் முன்

மந்திரங்கள் என்று

அடுக்கிச் சொல்வதில்

பயன் என்ன இருக்க ஞமுடியும்

அறியாத மொழியில்

இறை வழிபாடு

அர்த்தமற்றது

வடமொழியோ இலத்தீனோ

அரபியோ

எதுவாக இருந்தாலும் 

மெய்யான வழிபாட்டை

அது கேலி பேசுவதே யாகும்

இந்த மொழியின் ஒலி மட்டுமே

இறைவனுக்குப் பிடிக்கும் என்பது

எத்தனைப் பேதமை

கண்டவர் விண்டிலர்

விண்டவர் கண்டிலர் 

மெய் தானே.


No comments:

Post a Comment