Sunday, May 5, 2024

கவிதை- தேர்தல்

 தேர்தல் 


நாடாளுமன்றத்தேர்தல்

தமிழ் நிலத்தில்

முடிந்து போனது

தேர்தல் முடிவுகள் தெரியவரும்

நாட்கள் சிலவாகும்

காத்திருப்போம்

ஆனால் ஒரு கேள்வி

சாதி பார்த்துத்தான்

தேர்தலில் நிறுத்துவார்கள்

ஓட்டுப் போடுவார்கள்

ஐம்பத்து இரண்டில்

நெல்லையில் சோமயாஜுலு அய்யரும்

முதுகுன்றத்தில்

வேத மாணிக்கம்  அட்டவணை இனத்தார் பொதுத்தொகுதியிலும்

எம்எல்ஏ ஆனார்கள்

விடுதலைப் போராட்ட வீரர்கள்

இன்றைக்குச் சாத்தியமே இப்படி  எதுவும்

விடுதலை பெற்ற இந்தியத்

திருநாட்டில்

சாதி கெட்டிப்பட்டுக்

கிடக்கிறது

ராகுல் காந்தி

கேரள வயநாட்டில்

நிற்பது தனிரகம்.


No comments:

Post a Comment