Monday, May 6, 2024

கவிதை- கவியுளம்

 இணைய கால கவியரங்கம் 39

17/4/24



கவியுளம்



மெல்லத் தமிழ் இனிச்சாகுமென்று

பாரதி உரைத்ததாய் 

எத்தனையோ மேடைகளில்

தவறாய்ச் சொல்வதைக்

கேட்டுத்தான் இருக்கிறேன்

அரைகுறை வாசிப்பா

வேண்டுமென்றே பேசுவதா 

பாரதி இன்னவன்

இவனை எப்படிச் சொன்னால்

என்ன வென்று இருக்கலாமோ

மெல்லத் தமிழ் இனிச்சாகும் என்று 

அந்தப் பேதை உரைத்தான் 

அந்த வசை எனக்கு

வரல் ஆகாது எனத்

தமிழைத்தான் உயர்த்துகிறார் பாரதி

கவியுளம் காணாக்கீழ்மையை 

எப்படிப் பொறுப்பது.


No comments:

Post a Comment