Tuesday, January 16, 2024

கவிதை-பிடிக்காது ஜல்லிக்கட்டு

 இணைய கால கவியரங்கம் 90


16/1/24



பிடிக்காது  ஜல்லிக்கட்டு


எனக்கு சுத்தமாய்ப்

பிடிக்காது ஜல்லிக்கட்டு

அரசும் நீதிமன்றமும்

நடக்கட்டும் அதுவென

பச்சைக் கொடி காட்டியபின்

நீங்களும் நானும்

சொல்ல ஒன்றுமில்லை

அதற்காக மவுனம்

காத்திடத்தான் முடியுமா

காளைகள்

 கால் குளம்புகளுக்கிடையே

கூர் கொம்புகளுக்கிடையே

கருதிகொட்டி

சிதைக்கப்படும் மனிதனைக் கண்டும்

எப்படி ஏற்கிறதோ

மனித மனம்.

காளைகளின் விருப்பம்

யார் கேட்டார்கள்

வாயில்லா அவை சொல்லத்தான் போகிறதா?

சிங்கம் புலி ஆனைகளோடு

ஜல்லிக்கட்டு வைத்தாலென்ன?


No comments:

Post a Comment