Sunday, January 7, 2024

கவிதை-ரேஷன் கடை

 இணைய கால கவியரங்கம் 81


7/1/24


ரேஷன்கடை


கியா காரில் வந்திறங்கி

ரேஷன்கடை அரிசி வாங்கி

கறவை மாடுகளுக்கு வைக்கிறார்கள்.

பாமாயில் பாக்கெட்

 வாங்கி ஜோராய்த்

திருவிளக்குப் போடுகிறார்கள்.  

எனக்கு முன்னால்

க்யூவில் நின்ற ஆசாமி

பச்சரிசியும் புழுங்கலரிசியும்

ஒரே  சாக்குபையில் வாங்க

ஏன் அப்படி ? கேட்டேன் நான்

மாட்டுக்குத்தானே அது

பதில் தந்தார்

ரேஷன்கடைக்கு வரும்

அரிசியில் பாதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள்

எங்கெல்லாம் போகிறதோ அது 

யாரறிவார்

வாங்காத அரிசிக்கு வாங்கியதாய்க் குறுஞ்செய்தி கட்டாயம் வரும்.

மத்திய மாநில நிர்வாகங்கள் கண்களை மூடி கனா மட்டுமே காண்பார்கள்

அவ்வளவே.


No comments:

Post a Comment