Wednesday, January 3, 2024

கவிதை- பெண்டிரை மதிப்போமா.

 

இணைய கால கவியரங்கம் 77


3/1/24


பெண்டிரை மதிப்போமா.



பாரதி மாகவி சொன்ன சொல்

பாதகம் செய்பவரைக்கண்டால்

பயங்கொள்ளாதே நீ

காரி உமிழ்  அவர் முகத்தில்

போது மிதி

சாத்தியமாகிறதா இன்று

கற்பைச்சூறையாடும்

எத்தனைபேர் ஆட்சியின் அங்கமாய்

ஆகப்பெரிய பதவி வகிப்போராய்

பவனி வருகிறார்கள்

பல்லக்கில்.

உலக மேடையில் நாட்டின்

கவுரவத்தைக் கூட்டிய சோதரிகள்

பதக்கத்தை வீசி எறிகிறார்கள்.

தாம் கீழ்மையாய் நடத்தப்பட்டதற்குக்

கண்ணீர் விடுகின்றனர்.

பெண்மையை காலால் மிதித்துவிட்டு

காரியம் பார்க்கிறவர்கள்

கடவுளையும் கேலி பேசுகிறார்கள்

மகுடம் சூட்டிய மகாராசா என்கிறார்கள்

பூவுலகில் வாழத்தகுதியற்ற புல்லர்கள்.


No comments:

Post a Comment