Monday, January 8, 2024

கவிதை-காலம் மாறுது

 இணைய கால கவியரங்கம் 82


8/1/24


காலம் மாறுது


பேனாவால் எழுதியிருந்தால்

என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்

தாத்தா காலத்து கிரய பத்திரத்தை

இன்றைய தலைமுறை

வாசிக்கவே மாட்டார்கள்

பேனாவை வைத்து எழுதுவது

என்பது விடைபெற்றுக்கொள்ள

மடிக்கணினி அவ்விடத்தை ஆக்கிரமித்தது

அகராதி இல்லாது படிப்பது சாத்தியமில்லை

என்பது போய்

கூகிள்  எஜமானர் இட்டபணி எல்லாமாய்

செய்துகிடக்கிறது

எழுத்துப்பிழை இலக்கணப்பிழை

எல்லாம் கணினியின் நிர்வாகமே

வாயினால் சொல்வதைக்

கணிப்பொறி 

டைப்

அடித்துக்காட்டுகிறது

ஜோராய் ஒரு மொழியில்

தருவதை பிறிதொரு

மொழியில் பெயர்த்துக்காட்டுகிறது

கணிப்பொறியே

 இனி கவிதைகள் எழுதும்

கவியரங்கம் நிகழ்த்தும்.


No comments:

Post a Comment