Thursday, January 4, 2024

கவிதை-ராசி

20/12/23


ராசி

சென்னையில் மீண்டும்
வெள்ளம் என் வீட்டிலும் தான்
ஆராயிரம் ரூபாய்
அரசு தருதிறதாம்
வந்திருக்கிற லிஸ்டில்
என் பெயரில்லை
ஏன் இல்லை அதுதான்
யாருக்கும் தெரியாது
விண்ணப்பம் எழுதிக்கொடுங்கள்
என்றனர்
அது எங்கே கிடைக்கும் என்றேன்
சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் விலாசம்
தந்தார்கள்
அவ்விலாசம்
சென்றேன் தேடினேன்
கொடுப்பவர்கள் வரவில்லை என்றனர்
விண்ணப்பம் பெறுபவர்கள் மட்டுமே வந்திருந்தனர்
நாளை அவர்கள் வருவார்களா?
நாளை வந்து பாருங்கள்
பதிலாய் வந்தது
எது எதை வைத்து
எப்படி எழுதிக் கொடுக்க
வேண்டுமோ அப்படிக் கொடுத்தால்
வருமோ அது.
எதுவும் எளிதல்ல
என்னைப் பொறுத்தவரை.
வெள்ளம் நேர்படத்தான் நடந்து
கொண்டது
அதற்கு வஞ்சனையே
இல்லை.
கும்பத்திற்கு இன்று சனி வந்திருக்கிறான் ஆக அப்படித்தான் என்கிறாள்
அவள்.

No comments:

Post a Comment