Monday, January 15, 2024

கவிதை-வித்யாசமாய்

 இணைய கால கவியரங்கம் 89


15/1/24


வித்தியாசமாய்



பழையனக் கழிதலும்

புதியன புகுதலும் ஆகிப்

போகியும்  வந்தது

பொங்கலும் வந்தது

உழவர் திருநாள் அல்லவா இது

தமிழரின் பெருமைமிகு

விழாநாள்

உழைப்புக்கும் நட்புக்கும்

மெருகு சேர்க்கும் நந்நாள்

கால்நடைச்செல்வமாம்

மாடுகளுக்கு விவசாயி

நன்றி சொல்லும் பொன்நாள்

ஆடவர்கள் தமிழர்களாய்த்தெரிய 

வேட்டி

உடுத்திக் கொண்டார்கள்

உள்ளூர் பூங்கா ஒன்றில்

பெண்களின் கும்மியும் கோலாட்டமும்

எல்லாமும்தான் அரங்கேறிற்று

நான் வசிக்கும் 

தெரு முழுவதும் பொங்கலுக்கு

அழகழகாய்க் கோலம் போட்டிருந்தார்கள்

ஏனோ ஹேப்பி பொங்கல்

ஆங்கில எழுத்தில்

எல்லாக் கோலத்திலும்.


No comments:

Post a Comment