Wednesday, January 17, 2024

கவிதை- பிடிபடாதது

 இணைய கால கவியரங்கம் 91


17/1/24


பிடிபடாதது



நல்வாய்ப்பு எல்லார்க்கும்

வாய்த்து விடாது

தெரிந்த நல்லதை

யோசிக்காமல் செய்

நல்ல எண்ணங்கள்

தோன்றி அது செயலாக

மலர்வது கொடுப்பினை

எப்போதேனும் உதிக்கும்

நல்லெண்ணம் சட்டென

மறைந்துவிடும்

சாக்குரதை

மனிதனாக வாழ்வதுவே

அடுத்தவர்க்கு நன்மை செய்ய

இவ்வெண்ணம் செயலாக

மாறும்தருணம்

நீ மனிதனாகிறாய்

அதனைப்போற்று.

அது வளரட்டும் உறுதி கொள்

நல்லவனாக நான் இருந்து

என்ன ஆக வேண்டும்

எண்ணிவிடாதே

குறுக்காய் கேள்வி வேண்டாம்

நிறுத்து கேள்வியை

நற்செயல்கள் தொடரட்டும்

அதில் என்னவோ

மறைந்து கிடப்பதுண்மை.


No comments:

Post a Comment