Monday, January 22, 2024

கவிதை-அயோத்தி

 இணைய கால கவியரங்கம் 96


22/1/24


அயோத்தி


அயோத்தி ராமர் கோவில்

திறப்பு

பிரதமர் மோடி

அக்னி தீர்த்தத்தில் மூழ்கியதும்

புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் வாளிகொண்டு

நீர் சேந்தித் தலையில்

கொட்டிக்கொண்டதும்

திருவரங்கத்து ஆனை

ஆண்டாளின் தும்பிக்கையை

வருடிக் கொடுத்ததும்

சாதாரண மனிதனாய்

பிரதமரைக் காட்டியது

உலகுக்கு .

அதுவே ஓர் அதிசயமாய்

ஆனந்தமாய் பிரமிப்பாய்

சுயநலம் அற்ற  மாமனிதரை 

அடையாளம் காட்டியது எனக்கு.

ஆயிரம் விமரிசனம்

எப்போதும் உண்டுதான் 

அது வேறு இது வேறு.


No comments:

Post a Comment