Wednesday, January 24, 2024

கவிதை-சொந்தக்கதை

 இணைய கால கவியரங்கம்

98




சொந்தக் கதை



புத்தகங்கள் வாங்கியவை

அடுக்கிக் கிடக்கின்றன

படித்து முடித்து விட்டால்

மனம் நிம்மதிப் படும்

முடியவில்லையே

புத்தகங்கள் கூடிக்கொண்டே போகின்றன

இத்தனைக்குள் 

நாமே எழுதுவதற்கும்

நேரம் ஒதுக்கத் தான் வேண்டும்

அவை படைப்பாய் மலர்ந்து

பேர் சொல்ல வேண்டும்

பதிப்பகத்தின் உறவோ

கத்திமேல் நடப்பது போல்.

அத்தனையும் தாண்டி

விருதுகளின் அரசியல்

சும்மா விடாது படைப்பாளியை.

எழுத்தாளனுக்கு

காசும் வேண்டும்

காத்திரமான உடலும் வேண்டும்

ஆரோக்கியமும் வாய்க்க வேண்டும்

துளி அதிர்ஷ்டம்

வேண்டும்தான்

சொன்னாலும் சொல்லாவிட்டாலும்.


No comments:

Post a Comment