Thursday, January 25, 2024

கவிதை-வருத்தம்தான்

 இணைய கால கவியரங்கம் 99


25/1/24



வருத்தம்தான்



தேவன் எழுதிய

துப்பறியும் சாம்பு

கதைப்புத்தகத்தை

உன்னிடமிருந்து கடனாகப்

பெற்றுப் படித்தேன்

திருப்பிக் கொடுத்த போது

ஒரு பக்கத்து மூலை

மடங்கியதற்காய்

என்ன பேச்சு பேசினாய் நீ

அத்தோடு சரி

உன்னிடமிருந்து எந்தப்

புத்தகத்தையும்

கடன் வாங்கியதில்லை நான்

எனக்கும் ரோசம் தான்

நீயோ விடைபெற்றுச்

சென்றுவிட்டாய் எல்லாரிடமிருந்தும்.

நீ நேசித்த அத்தனை

புத்தகங்களையும்

யார் யாருக்கோ

நின்வீட்டார் 

அள்ளி அள்ளிக் கொடுத்து அலமாரிகளைக்

காலி செய்தது நீ அறிய மாட்டாய்

யாருக்கும் பிடிபடாதது

எத்தனையோ புதிர்களோடு

என்னவோ உலகம் இது.


No comments:

Post a Comment