Thursday, December 28, 2023

கவிதை- நேரு கெட்டிக்காரர்

 இணைய கால கவியரங்கம் 70


28/12/23


நேரு கெட்டிக்காரர்


பாரதபூமியில்

மொழிவாரி மாநிலம்

பிரித்ததால்தான்

திராவிடம் சிதைந்து போனது

பொதுவுடமைக் கட்சி தெற்கில் சுருங்கிச் சிறுத்தது

இந்தி பேசும் மாநிலங்கள்

தாமே சட்டாம்பிள்ளையெனத்

துருத்தித் திரிகின்றன

கன்னடக்காரர்கள்

மொழிவெறிபிடித்து

ஆட்டம் போடுகிறார்கள்

மொழிவாரி மாநிலம்தான்

சரியென்றால் ஏன்

தெலுங்கு பேசுவோர்

மாநிலத்தை இரண்டாய்ப் பிரித்தார்கள்

புதுச்சேரியில் தமிழ்தானே

ஏன் நம்மோடு ஒட்டமுடியாமல் நிற்கிறது

கவிதையில் விடை தாருங்களேன்

யான் ஐயம் தெளிவேன்.


No comments:

Post a Comment