Tuesday, December 19, 2023

கவிதை- எளிதல்ல இல்வாழ்க்கை

இணையக் கால கவியரங்கம் 61


19/12/2023


 


எளிதல்ல இல்வாழ்க்கை


இப்போதெல்லாம்

மணமுறிவு சர்வ சாதாரணமாய்.

ஆண்களும் பெண்களும்

கூட்டம் கூட்டமாய்

நீதிமன்றங்களைப் பாருங்கள்

மனமுடைந்து போவீர்கள்.

ஏதுமறியா குழந்தைகள் தாம் 

பலிகடா ஆகின்றனர் பாவம்.

திருமணத்திற்கு முன்பாக

ஆணுக்கும் பெண்ணுக்கும்

குடும்பம் என்னும் 

ஒரு வகுப்பு கட்டாயம் வேண்டும்.

திருமணம் என்ன

 என்பதே

தெரியாமல் மணம் செய்து

முட்டிக்கொள்கின்றனர்

நீதி மன்றத்தில்.

யாரேனும் ஒருவர்

ஈகோ இல்லாமல் இருந்தாலொழிய இல்லற

வாழ்க்கையில்

 வெற்றி

சாத்தியமே இல்லை.

கல்யாணத்தில் சப்தபதி

என்னும் ஏழடி எடுத்து வைக்கும்

வைதீகச்சடங்கின் மந்திரத்தை

செந்தமிழில் சொன்னால்

எல்லோருக்கும் விஷயம் விளங்கலாம்

மனதில் அச்சம்

சற்றேனும் அரும்பலாம்.

 

No comments:

Post a Comment