Saturday, December 9, 2023

கவிதை- அழகியசிங்கர் -70

 இணையக் கால கவியரங்கம்

எண் 49

7/12/23

கதைஞன் கவிஞன்
விருட்சம் வெளியீட்டாளன்
நவீன விருட்சம் இதழாளன்
சொல்புதிது இசைபுதிது
கண்டவன்
என்பா அவன் தந்தது
கவிதை நேசிப்பு
கவிதை வாசிப்பு
கதை அலசல்
அழகியசிங்கரின் தீட்சண்யவெளி
ஞானக்கூத்தனும்
அசோகமித்திரனும்
சாயாவனம் கந்தசாமியும்
உற்றத் தோழமை
எப்போதும் ஏதேனும்
புதிது செய்யத் தப்பாத
தமிழண்ணல்
எதையுமே மறைக்கத்தெரியாத மாசிலி
தேய்ந்த பற்கள் பளிங்கென உள்ளம் திறந்து காட்டும்.
சும்மா இருப்பதறியா பெம்மான்
எழுபதாண்டு கண்ட இளையோன்.
இன்புற்று வாழ்க
இப்புவியில் நூற்றாண்டு.

No comments:

Post a Comment