Friday, December 15, 2023

கவிதை- குடிப்பழக்கம்

 இணையக் கால கவியரங்கம்


15/12/23


எஸ்ஸார்சி


குடிப்பழக்கம்



மக்கள் குடித்து அழிக்கிறார்கள்

மக்கள் குடித்து

அழிகிறார்கள்

கள்ளச்சாராயம் காய்ச்சிக்

குடிப்பதால் சாகிறார்கள்

வாய்மையே வெல்லும்

சொல்லும் அரசாங்கம்

சாராயம் விற்கிறது

கொள்ளை லாபம் பார்ப்பவர்கள்

தொடர்ந்து கல்லா கட்டுகிறார்கள்

தேசபிதா மகாத்மா

குடிப்பழக்கம் இல்லாத தேசத்தை உருவாக்க

ஆசைப்பட்டார் பாவம்

பரிதாபமாய்த் தோற்றுப்போனார்

குடிக்காத பெண்களை

மாநகரில் விரல்விட்டு

எண்ணிவிடலாம்

ஐடி தொழில் வந்தபிறகு

குடிக்கத்தெரியாதவன்

சுத்தப் பட்டிக்காடு

நஞ்சுண்பார் கள்ளுண்பவர் சொன்ன வள்ளுவருக்குக்

குமரிமுனையில்

வானுயர சிலை வைத்தாயிற்று

பிறகென்ன விடுங்கள்


No comments:

Post a Comment