Monday, December 11, 2023

கவிதை -பாரதி அன்றும் என்றும்

 23-12-11 - Leave a Comment

இணையக்கால கவியரங்கம்

53

11/12/23

பாரதிக்கு எதிராகக் கலகக்குரல்
கொடுக்க முடியாத அளவுக்கு
புகழின் எட்டாச்சிகரத்தில்
அவன் எப்போதும் வாழ்கிறான்
தமிழ்த்தாயின் ஆசீர்வாதம்
நிறைவாய் உண்டு பாரதிக்கு.
சிந்தையில் பாரதியோடு
வாழ்ந்தவர் வ உ சி
பாரதியை நாவில் சுமந்தார் வ.ரா.
பாரதியைத்தோளில் சுமந்தவர் ஜீவா
பாரதியின் சொற்கள் அத்தனையும் வழிமொழிந்தார் பாவேந்தர்
இவர்களோடு ஓராயிரம்
உத்தமர்கள் அவனோடு
வாழ்ந்தது அவனுக்கு க்கிட்டிய வரலாற்றுப்பேறு.
இன்றைய சேற்று அரசியலும் சோற்று அரசியலும் அன்றில்லை
அது மாற்றுக் குறையா
அரசியல்
மனசாட்சி உள்ள மறவர்களின்
மாற்று அரசியல்.

No comments:

Post a Comment