Saturday, December 9, 2023

கவிதை- அயோத்தி

கவிதை   -அயோத்தி   இணையக்கால கவியரங்கம்    9/12/23        

கங்கைப்படகோட்டி குகனைத்
தம்பியாக்கி
பருந்து ஜடாயுவைத்
தந்தையாக்கி
வானரமாம் அனுமனை
எதிரி இராவணன் இளவலைச்
சுற்றமாக்கிய பெரிய பெரியவன்
கரிய செம்மலுக்கு அயோத்தியில்
கோவில் கட்டுகிறார்கள்
கடவுள் ராமர் மீது கொண்ட
பக்தியினால் கட்டப்படுவதா அது
ராமபக்திக்கு மணல் சுமந்த அணிலைத்தான் சாமான்யர்கள்
உதாரணம் காட்டுவார்கள்
அவ்வணிலுக்கு ஈடாய்
யாரேனும் ஒரேயொரு
பெரிய மனிதரைச் சுட்டுங்களேன்
வணங்கி எழலாம்.

No comments:

Post a Comment